Home உலகம் கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையினா் ஒருவர் பாரிஸ் விமான நிலையத்தில் கைது

கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையினா் ஒருவர் பாரிஸ் விமான நிலையத்தில் கைது

by admin

பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச் சித்திரவதை செய்து கொன்ற மரணப் படைஉறுப்பினர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பாரிஸில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

பாரிஸ் றுவாஸி (RoissyCharles-de-Gaulle Airport) விமான நிலையத்தில் இருந்து றியாட்டுக்குப் பயணமாகவிருந்த சமயத்தில் எல்லைப் பாதுகாப்பு காவல்துறையினா் Khalid Alotaibi என்னும் 33 வயதுடைய அந்த நபரைக் கைது செய்தனர் என்றுசெய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி விடுத்திருந்த சர்வதேச பிடியாணையின் கீழ் அவர் காவல்துறை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். Khalid Alotaibi என்ற பெயருடைய கடவுச் சீட்டைகாண்பித்தே அவர் பயணம் செய்யவிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் சமர்ப்பித்த பெயர் விவரங்கள் உறுதியானால் நாளை புதன்கிழமை அவர் பாரிஸ்நீதிமன்றம் ஒன்றில் முன்னில செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.

பிரபல பத்திரிகையாளரான ஜமால் கஷோக்கி சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தலைமறைவாக இருந்து ஊடகப் பணியாற்றிவந்தவர். தனது திருமணத்துக்கான ஆவணம் ஒன்றைப் பெறுவதற்காக அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 2ஆம் திகதி துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபியாத் தூதரகத்திற்குச்சென்ற பின்னர் காணாமற்போயிருந்தார்

சவுதி அரசாங்கத்தின் பணிப்பின் பேரில்அங்கிருந்து விசேட விமானத்தில் வந்த மரணப்படையணி ஒன்றைச் சேர்ந்தவர்கள் தூதரகத்தினுள் வைத்து கஷோக்கியைச் சித்திரவதை செய்து உடலைப் பலதுண்டங்களாக அரிந்து கொன்றனர் எனநம்பப்படுகிறது.

ஆனால் அவரது உடல்எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பாரிஸில் கைது செய்யப்பட்டிருக்கின்ற Khalid Alotaibi என்ற பெயருக்குரிய நபரும் சவுதி அரேபியாவின் மரணப்படையில் ஒருவர் என்று அமெரிக்கா மற்றும் துருக்கி அதிகாரிகளால் குறிப்பிடப்படுகிறார்.

அவரும் அவரோடு அப்படையில் இடம்பெற்றவர்கள் எனப் பெயர் வெளியாகிய வேறு பலரும்ஷெங்கன்(Schengen) எல்லைகளுக்குள் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நியூயோர்கில் இருந்தவாறு கஷோக்கி சவுதி அரேபிய அரச குடும்ப ஆட்சியைக்கடுமையாக விமர்சித்து வந்த காரணத்துக்காக எம்பிஎஸ்( MBS)என்று அழைக்கப்படும் சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானே (Crown Prince Mohammed bin Salman) அவரை தனதுரகசிய ஏஜென்டுகள் மூலமாகப் பழிதீர்த்தார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இளவரசருடைய மெய்க்காவலர்கள் உட்படப் படுகொலையில் தொடர்புபட்டகுழுவினருக்கு எதிராகத் துருக்கியில்வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கஷோக்கி படுகொலை நடந்து மூன்றுஆண்டுகளின் பின்னர் பிரான்ஸின்அதிபர் மக்ரோன் கடந்தவாரம் சவுதிஇளவரசர் மொஹமட் பின் சல்மானைநேரில் சந்தித்துப் பேசியிருந்தார். கஷோக்கி படுகொலைக்குப் பின்னர் சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்து இளவரசரைச் சந்தித்த முதலாவது மேற்கு நாட்டுத் தலைவர் அவரே ஆவார். கொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகச் சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டு வருகின்ற இளவரசரை மக்ரோன் சந்தித்ததற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.-

——————————————————————-

குமாரதாஸன். 07-12-2021பாரிஸ்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More