Home உலகம் கஷோக்கி படுகொலை தொடர்பாக பாரிஸில் கைதான நபர் விடுவிப்பு – பெயர் குழப்பமே கைதுக்கு காரணம்

கஷோக்கி படுகொலை தொடர்பாக பாரிஸில் கைதான நபர் விடுவிப்பு – பெயர் குழப்பமே கைதுக்கு காரணம்

by admin

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கிபடுகொலையில் தொடர்புடையவர்என்ற சந்தேகத்தில் பாரிஸ் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சவுதிப் பிரஜை விடுவிக்கப்பட்டிருக்கிறார். கஷோக்கியைப் படுகொலை செய்தமரணப் படைப்பிரிவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் Khaled al-Otaibi என்பவர் பாரிஸ் விமான நிலையத்தில்இரண்டொரு தினங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

துருக்கி அரசு விடுத்திருக்கும் சர்வதேசக் கைது உத்தரவின் கீழேயே அவரைப் பாரிஸ் அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர். ஆனால் கைதான நபர் தேடப்படுகின்ற Khaled al-Otaibi அல்லர் என்றும் அதே பெயரைக் கொண்ட மற்றொரு சவுதிப்பிரஜை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பாரிஸ் சட்டமா அதிபர்அலுவலகம் தெரிவித்துள்ளது

.Khaled al-Otaibi என்ற பெயருடைய கடவுச்சீட்டை வைத்திருந்ததன் காரணமாகவேஅவர் காவல்துறையினரிடம் சிக்க நேர்ந்துள்ளது.தற்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதேவேளை, கைதானவர் கொலையில்தொடர்புடைய நபர் அல்லர் என்பதைபாரிஸில் உள்ள சவுதி அரேபியத் தூதரகமும் உறுதிப்படுத்தி உள்ளது.

உண்மையான Khaled al-Otaibi சவுதி அரேபியாவின் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கிறார்.Khaled al-Otaibi என்னும் பெயரில் நூற்றுக் கணக்கான சவுதி பிரஜைகள் உள்ளனர்என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.-

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.08-12-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More