97
சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்..
குறித்த சிறுவன் நேற்றைய தினம் தனது வீட்டின் மேல் தளத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டு இருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.. அதனை அடுத்து மூளாய் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love