Home இலங்கை மூதூாில் குண்டுவெடிப்பு – சிறுவன் பலி

மூதூாில் குண்டுவெடிப்பு – சிறுவன் பலி

by admin

மூதூர் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் அல்லேநகர் பிரதேசத்தில்   இன்று (12) பிற்பகல் குண்டொன்று வெடித்துள்ள நிலையில் சம்பவத்தில் காயமடைந்த 15 வயதுச்சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

தங்களது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை,குழை வெட்டுவதற்காக, அருகிலுள்ள இடமொன்றுக்கு சென்ற சிறுவன் அங்கு, மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த போதே குண்டு போன்ற ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கடுமையான காயமடைந்த சிறுவன், தோப்பூர் வைத்தியசாலயில் அனுமதித்த போதே அவா் உயிாிழந்துவிட்டார் எனவும், அவரது சடலம் அந்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More