Home இலங்கை கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டதாரிகள் தமது சுயமரியாதையை வெளிக்காட்டியுள்ளனர்!

கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டதாரிகள் தமது சுயமரியாதையை வெளிக்காட்டியுள்ளனர்!

by admin

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பட்டதாரிகள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது முன்னுதாரணமானது என்றும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும் எனவும், ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது சுயமரியாதையை வெளிக்காட்டியுள்ளதாகவும், ஜனாதிபதியும் அரசாங்கமும் மாணவர்களின் செய்தியை உணர்ந்து செயற்பட வேண்டுமெனவும் எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஒரு பாடமாக வண. மகாநாயக்கர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல், தனிப்பட்ட மற்றும் உறவுமுறை தொடர்பான பதவிகள் வழங்கப்படும் போது பெரும்பாலானவர்கள் வாய் மூடி இருந்தாலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது எதிர்ப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக சொந்த பந்தம் காரணமாக நாடு ஒரு பேரழிவை எதிர்கொண்டுள்ளதாகவும், இதுவரையான தனது செயற்திட்டம் தோல்வியடைந்துள்ளது என்பதை ஜனாதிபதி இப்போதாவது உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது பட்டதாரி சான்றிதழ்களை கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் பெற்றுக்கொள்ள மறுத்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More