Home இந்தியா இலங்கைக்கு கடத்தவிருந்த 40 லட்சம் மதிப்புள்ள சுறாஇறகு, கடலட்டை, மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த 40 லட்சம் மதிப்புள்ள சுறாஇறகு, கடலட்டை, மஞ்சள் பறிமுதல்

by admin


இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் உள்ளிட்ட சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை காவல்துறையினா் நேற்று சனிக்கிழமை (1) இரவு பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம்  மாவட்டம் மண்டபம் அருகே  வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சுறா இறகு , சமையல் மஞ்சள்  உள்ளிட்ட  பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ  பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய   தகவலையடுத்து வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் காவல்துறையினர் மற்றும் மண்டபம் வனத்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 


இதன் போது வேதாளை தெற்கு தெருவில் சதாம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த   34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள்,   13 மூடைகளில் 400 கிலோ சுறா  இறகு,  பதப்படுத்திய  கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை  பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சதாம் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (1) இரவு நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More