Home இலங்கை கொழும்பு துறைமுக நகர, பொது நடைபாதை, இலகுரக படகு முற்றத்தைில் சீன வெளியுறவு அமைச்சர்!

கொழும்பு துறைமுக நகர, பொது நடைபாதை, இலகுரக படகு முற்றத்தைில் சீன வெளியுறவு அமைச்சர்!

by admin

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொது நடைபாதை, இலகுரக படகு முற்றம் ஆகியவற்றை இன்று (09.01.22) திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இலங்கை சென்றுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இதேவேளை, சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அதன்படி, நாளை (10) முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள நுழைவின் ஊடாக பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் குறித்த பகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More