Home இலங்கை கடலுக்கு சென்ற தந்தையும், மகனும் பலி

கடலுக்கு சென்ற தந்தையும், மகனும் பலி

by admin

கடலுக்கு தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்த தந்தையும், மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனா். வாகரை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடல் பகுதியில் வைத்து இருவரும் காணாமல் போயிருந்தனர்.

நேற்று (16) மாலை 5 மணியளவில் வழமை போன்று இயந்திரப்படகில் தந்தையும் மகனும் கடலுக்குச் சென்ற நிலையில் அவா்கள் இருவரும் வீடு திரும்பாத நிலையில் அவா்களைத் தேட ஆரம்பித்த ஏனைய மீனவர்கள், அவர்கள் சென்ற இயந்திரப்படகையும், மீன்பிடிக்க கடலில் வைக்கப்பட்ட வலையையும் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து கல்குடா மீட்புபடையினாின் உதவியுடன் காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில் இருவரது உடல்களும் இன்று மீட்கப்பட்டுள்ளன.

காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியை ல்ச்சேர்ந்த 55 மற்றும் 18 ஆகிய வயதுகளுடைய தந்தையும், மகனுமே இவ்வாறு இவ்வாறு கடலில் மூழ்கி உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More