Home சினிமா ஜெய்பீம் திரைப்படத்துக்கு தொடா்ந்து கிடைக்கும் அங்கீகாரம்

ஜெய்பீம் திரைப்படத்துக்கு தொடா்ந்து கிடைக்கும் அங்கீகாரம்

by admin

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படம், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது.

இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோவினை சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஒப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சனலில் பதிவிடப்பட்டிருக்கிறது.

இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என திரையுலகத்தினர் பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தங்களுடைய பட நிறுவனத்தின் மூலமாகத் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்டவற்ிற படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார்.

இந்நிலையில், ஒஸ்கரை தொடர்ந்து அடுத்த அங்கீகாரமாக நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு ஜெய்பீம் திரைப்படம் தேர்வாகி உள்ளது. எதிா்வரும் ஜனவரி 23ம் திகதி நடைபெறவுள்ள 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ல், 50க்கும் மேற்பட்ட உலகநாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.

இந்தநிலையில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் இந்த விழாவில் போட்டியிடுவது தமிழ் சினிமாவுக்கே கிடைத்த பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More