அதிபர் , ஆசிரியர்களாக ஒன்றிணைந்து “நிறைபேறான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்திற்கான போராளர் மாநாடு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யோசப் ஸ்டாலின் மற்றும் வடக்கு மாகாண இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் வடக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் எனப் பலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்