Home உலகம் பிரித்தானிய மகாராணியையும் கொரோனா தொற்றிக் கொண்டது!

பிரித்தானிய மகாராணியையும் கொரோனா தொற்றிக் கொண்டது!

by admin


பிரித்தானிய மகாராணிக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

லேசான குளிர் இருப்பதான அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், மகாராணியாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வாரம், விண்ட்சரில் தனது கடமைகளை மகாராணியார் தொடர்வார் என எதிர்பார்ப்பதாகவும் அரண்மனை தெரிவித்துள்ளது.


சிம்மாசனத்தின் வாரிசான இளவரசர் சாள்ஸ் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு உள்ளான வாரத்தில் இளவரசர் சார்ல்ஸுடன் மகாராணி நேரடி தொடர்பில் இருந்துள்ளதாக அரண்மனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


பிரித்தானியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி, அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகளை நிறைவு செய்து, தனது வரலாற்று சிறப்புமிக்க பிளாட்டினம் விழாவை கொண்டாடுகின்ற சில வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மூன்று முறை மகாராணியார் தடுப்பூசியை பெற்றிருந்ததாக அறியப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More