Home இலங்கை முல்லைத்தீவில் திருட்டில் ஈடுபட்டவர்கள் யாழில் கைது

முல்லைத்தீவில் திருட்டில் ஈடுபட்டவர்கள் யாழில் கைது

by admin

முல்லைத்தீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது. செய்யப்பட்டுள்ளனா். கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரே இவ்வாறு இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

சாவகச்சேரி ,நெல்லியடி ஊர்காவற்துறை, பகுதியைச் சேர்ந்த மூவர் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளதாகவும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் என யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More