Home இலங்கை யாழ்.கட்டுவானில் கசிப்புக்குகை முற்றுகை – ஒருவர் கைது – 20 லீட்டர் கசிப்பு மீட்பு!

யாழ்.கட்டுவானில் கசிப்புக்குகை முற்றுகை – ஒருவர் கைது – 20 லீட்டர் கசிப்பு மீட்பு!

by admin

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கட்டுவான் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்ட காவல்துறையினர் , அங்கிருந்த ஒருவரை கைது செய்ததுடன் , ஆயிரம் லீட்டர் கோடா மற்றும் 20 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர். 


தெல்லிப்பளை காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தினை காவல்துறையினருடன் இணைந்து நேற்றைய தினம் முற்றுகையிட்டனர். 


கைது செய்யப்பட்ட நபரை தெல்லிப்பளை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மீட்கப்பட்ட பொருட்களை சான்று பொருட்களாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More