Home இலங்கை சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய இளைஞன் கைது!

சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய இளைஞன் கைது!

by admin

15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று,குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 


ஊர்காவற்துறை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும் 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி காணாமல் போயுள்ளார். 


அது தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , சிறுமி தான் காதலித்த இளைஞனுடன் வீடொன்றில்  வாழ்வதனை அறிந்து, அங்கு சென்று சிறுமியை மீட்டதுடன் , இளைஞனையும் கைது செய்துள்ளனர். 


மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ள காவல்துறையினர் , இளைஞனை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More