Home இந்தியா கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு

கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு

by admin


 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று   இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை கரை ஒதுங்கியுள்ளது.


மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக   கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரி கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி உத்தரவின் பேரில்   சுங்கத்துறை அதிகாரிகள்   சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்


 குறித்த படகில் (OFRP-A-0851 KCH )என்ற இலக்கம் காணப்படுகின்றது. குறித்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா?  அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகா ? இப் படகில் யாரும்  வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


 மேலும் கியூ பிராஞ்ச் காவல்துறையினா் மற்றும்  கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More