Home உலகம் 132 பேருடன் சீனவிமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது

132 பேருடன் சீனவிமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது

by admin

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர். எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் தொடா்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்த போது வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பின்னா் நடைபெற்ற முதல் விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More