சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக, சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நாட்டில் காணப்படும் நெருக்கடி நிலையால் தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகுமாறு, அழுத்தம் தெரிவித்து, இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கை, சட்டமா அதிபர் அலுவலகம் வரை சென்றது. இதில் சுமார் 1,500 சட்டத்தரணிகள் வரை கலந்துகொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது