Home இலங்கை கொடிகாமத்தில் இராணுவத்தினருக்கு காணி சுவீகரிக்க மக்கள் எதிர்ப்பு

கொடிகாமத்தில் இராணுவத்தினருக்கு காணி சுவீகரிக்க மக்கள் எதிர்ப்பு

by admin

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக தனியார் காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்யும் முயற்சி மக்களின் எதிர்ப்பு போராட்டத்தினால்  தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 


கொடிகாமம் மத்தி J/ 326 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான 10.5 பரப்பு காணியில் 15ஆவது கஜபாகு படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளனர். 


குறித்த காணியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை நிரந்தர முகமாக அக்காணியில் நிர்மாணிக்கும் முயற்சியில் முதல் கட்டமாக அக்காணியை சுவீகரிப்பதற்காக  நிலஅளவை  செய்வதற்கான பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட இருந்தது 
அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் , காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More