Home இலங்கை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல்!

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல்!

by admin

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு தரப்பினராலும் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.

அதன்படி தியாகி பொன் சிவகுமாரன் நண்பர்களால் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்ததுடன் அகவணக்கம், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சி பேதமற்று பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தியாகி பொன் சிவகுமார் அவர்களின் 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் சி. இளங்கோ தலைமையில் நடைபெற்றது இதில் யாழ் மாநகர முதல்வர் நல்லூர் பிரதேச சபை தவிசளார் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் மற்றும் கட்சி உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More