Home இலங்கை பிரதமரின் உரையை அடுத்து யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்!

பிரதமரின் உரையை அடுத்து யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்!

by admin

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று வாரங்களுக்கு எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்ற போலியான தகவல்கள் பரவின.

இந்த நிலையில் பொதுமக்களும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் முதல் எரிபொருள் நிரப்புவதற்கு முண்டியடித்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டு காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வமான தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More