Home இலங்கை இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விலகியதாக நாடாளுமன்றம் அறிவித்தது!

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விலகியதாக நாடாளுமன்றம் அறிவித்தது!

by admin

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 14ஆம் திகதி முதல் விலகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் என்றும் சபையில் தெரிவித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More