Home இலங்கை பொருளாதார நெருக்கடி சுகாதார கட்டமைப்பினை இறுதிக்கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளது

பொருளாதார நெருக்கடி சுகாதார கட்டமைப்பினை இறுதிக்கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளது

by admin

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பினை வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளதாகவும் இந்நிலையானது கர்ப்பிணிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்துள்ளதாகவும்குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின் உபகரணங்கள், மருந்து பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணிப் பெண்கள் போசாக்கற்ற உணவு மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் UNFPA-இன் நிர்வாக இயக்குனர் மருத்துவா் நட்டாலியா கானம் ( Natalia Kanem ) இனை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள்  சபை தெரிவித்துள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More