Home இலங்கை நல்லைக்கந்தன் தேர் வெள்ளோட்டம்

நல்லைக்கந்தன் தேர் வெள்ளோட்டம்

by admin

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம்இன்றைய தினம் புதன்கிழமை  காலை 7 மணிக்கு இடம்பெற்றது. 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் ஆலயத்துக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டது.  

அந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தினால், அதன் அபாயத்தை உணர்ந்த ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை தொடக்கி வைத்தார்.

அந்த தேரே 1964ஆம் ஆண்டு முதல் மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது, இழுக்கப்பட்டு வந்தது.

அந்த தேரே தற்காலத்தில் மீண்டும் புனருத்தாரணத் திருப்பணி நிறைவுற்று இன்றைய தினம் புதன்கிழமை  காலை 7 மணிக்கு வெள்ளோட்டம் இடம்பெற்றது. 

அதேவேளை இன்றைய தினம் மாலை சப்பர திருவிழாவும் நாளை வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More