Home இலங்கை இடைக்கால வரவுசெலவுத்திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இடைக்கால வரவுசெலவுத்திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

by admin

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின்  இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்து. நாடாளுமன்றத்தில் இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 120  வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதியப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பிளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் அணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் புறக்கணித்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய  கட்சியினா் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

இதனையடுத்து 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டம் , திருத்தங்களுடன், மூன்றாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்படாது நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More