Home இலங்கை மீனவாின் சடலம் மீட்பு

மீனவாின் சடலம் மீட்பு

by admin

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். கடந்த சனிக்கிழமை (17) இயந்திர படகில் மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களில் நேற்று (18) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அவருடன் சென்ற மீனவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இப்றா லெப்பை கலீல் என்பவரே இவ்வாறு கடலுக்குச் சென்று உயிாிழந்தவா் என தொிவிக்கப்பட்டுள்ளது.

உயிாிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More