Home இலங்கை தொல்புரத்தில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல் -விசாரணையில் நகைகளும் கொள்ளை என தெரிவிப்பு

தொல்புரத்தில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல் -விசாரணையில் நகைகளும் கொள்ளை என தெரிவிப்பு

by admin

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் , பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை காவல்துறையினரின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த சிசிரிவி கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர்,  வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்றகாவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த போது , நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இரு குடும்பங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே பெண்ணின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More