Home உலகம் தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு – 34 பேர் பலி

தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு – 34 பேர் பலி

by admin

தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளனா் எனத் தொிவிக்கப்படுகின்றது.

குழந்தைகள் காப்பகத்தில் அதிகமான குழந்தைகளும், பெற்றோர்களும், ஊழியர்களும் இருந்த வேளை காப்பகத்திற்குள் புகுந்த இனந்தொியாத நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளாா்.

இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது உயிாிழந்தோாின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. . இதில் 22 பேர் குழந்தைகள் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாாியும் இறுதியில் கடைசியில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் போது அவா் முன்னாள் காவல்துறை அதிகாரி எனத் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More