Home இலங்கை பெண்ணுடன் தவறான உறவை பேணியவர் , அப்பெண்ணின் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் கைது

பெண்ணுடன் தவறான உறவை பேணியவர் , அப்பெண்ணின் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் கைது

by admin

குடும்ப பெண்ணொருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபர் , அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருடன் 41 வயதான நபர் ஒருவர் தவறான உறவினை பேணி வந்துள்ள நிலையில் அப்பெண்ணின் 13 வயதான சிறுமியை தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் உள்ளாகியுள்ளாா் என குற்றம் சாட்டப்படுகிறது. 

அது தொடர்பில் அறிந்த , அயலவர்கள் மானிப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , மானிப்பாய் காவல்துறையினரினால் இன்றைய தினம் புதன்கிழமை சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த குற்றத்தில் அந்நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More