Home இலங்கை மன்னாாில் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைனுடன் 6 பேர் கைது

மன்னாாில் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைனுடன் 6 பேர் கைது

by admin

மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் புத்தளம் நுரைச்சோலை பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை (17)தேடுதல்  நடவடிக்கைக்காக சென்றிருந்த மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதை பொருளை மீட்டனர்.

 1 கிலோ 26 கிராம் கொக்கைன் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் மற்றும் கல்பிட்டியினை சேர்ந்த  25, 26, 34, 36, 53 வயதுடைய 5 சந்தேகங்களையும் கைது செய்தனர்.

 அவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் நானாட்டான பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அருகண்குண்டு   பகுதியினைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரின் வீட்டில் இருந்து கொக்கேன்   வகை போதைப்பொருள் 506 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபா்களை இன்றைய தினம்(19)மன்னார் மாவட்ட நீதிமன்றில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More