Home இலங்கை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

by admin

மாவிட்டபுரம் பகுதியில் காங்கேசன்துறை காவல்நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

வாகனம் திடீரென தீ பிடித்த நிலையில் அதனை அணைக்க பலரும் போராடிய நிலையில் , காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டும் தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் முற்றாக எரிந்துள்ளது. 

வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீg;பிடித்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைகாவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More