Home இலங்கை பருத்தித்துறை காவற்துறைப் பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை!

பருத்தித்துறை காவற்துறைப் பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை!

by admin

பருத்தித்துறை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , பருத்தித்துறை காவற்துறையினரால் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பருத்தித்துறை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பாவனைகள் மற்றும் விற்பனைகள் அதிகரித்துள்ளதாக காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மோப்ப நாயின் உதவியுடன் தேடுதலை நடாத்தி இருந்தனர்.

பருத்தித்துறை சந்தை, முச்சக்கரவண்டித் தரிப்பிடங்கள், மந்திகைச் சந்தை, மந்திகை வைத்தியசாலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை பருத்தித்துறை காவல் நிலைய தலைமைப் காவற்துறைபரிசோதகர் பியந்த அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது. சோதனை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் எவையும் கைப்பற்றப்படவில்லை.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More