Home இலங்கை யாழ். போதனாவில் ஐஸ் போதைப்பொருள் பாவித்த அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை

யாழ். போதனாவில் ஐஸ் போதைப்பொருள் பாவித்த அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை

by admin

ஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதான குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.  முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு வயதான குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் குழந்தையின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குழந்தை ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டு இருந்தமைக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.  அதனை அடுத்து குழந்தையின் தாயாரிடம் வைத்தியர்கள் விசாரணை செய்த போது , குழந்தையின் தந்தையான தனது கணவர் முன்னர் போதைப்பொருள் பாவித்தார் எனவும் , ஆனால் தற்போது அவர் பாவிப்பதனை கைவிட்டு விட்டார் எனவும் , குழந்தை எவ்வாறு போதைப்பொருளை உட்கொண்டது என தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் , தொடர்ந்தும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை , குழந்தை போதைப்பொருள் உட்கொண்டு இருந்தமை தொடர்பில் வைத்தியசாலை காவல்துறையினர் ஊடாக முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு காவல்துறையினர்  தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள் என அறிய முடிகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More