Home இலங்கை 2400 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது!

2400 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது!

by admin

யாழ்ப்பாணம் மானிப்பாய்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை இன்றைய தினம் திங்கட்கிழமை  மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தியாவின் தமிழகத்திலிருந்து 2400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த வாகனமொன்றை காவல்துறையினர்  வழிமறித்து சோதனையிட்ட போதே பெருந்தொகையான மஞ்சள் மீட்கப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் சுதுமலைப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இரண்டு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் நாளைய தினம்  செவ்வாய்க்கிழமை முற்படுத்த மானிப்பாய் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More