Home இலங்கை மஞ்சளுடன் கைதானவர்களுக்கு ஒரு இலட்சம் தண்டம் – மஞ்சள் அரசுடமை

மஞ்சளுடன் கைதானவர்களுக்கு ஒரு இலட்சம் தண்டம் – மஞ்சள் அரசுடமை

by admin
யாழ்ப்பாணத்தில் மஞ்சளுடன் கைதான இருவருக்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்படம் அறவிட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மஞ்சளை அரசுடமை ஆக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த கடந்த 2 ஆயிரத்து 448 கிலோகிராம் மஞ்சளுடன் சுதுமலை பகுதியை சேர்ந்த இருவர் மானிப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , விசாரணைகளில் போது இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிட்ட மன்று , சான்று பொருளாக மன்றில் சமர்ப்பித்த 2448 கிலோ மஞ்சளையும் அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்டது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More