Home இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

by admin

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்  இரண்டாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டமானது யாழ்ப்பாணத்தில் நாவற்குழி சந்திக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை  முன்னெடுக்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More