Home இலங்கை மல்லாகத்தில் திருட்டு – 24 மணிநேரத்தில் சந்தேகநபரை கைது செய்து நகைகளை மீட்ட காவல்துறையினா்

மல்லாகத்தில் திருட்டு – 24 மணிநேரத்தில் சந்தேகநபரை கைது செய்து நகைகளை மீட்ட காவல்துறையினா்

by admin

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திருடப்பட்ட நகைகளை இன்றைய தினம் காவல்துறையினா் மீட்டுள்ளதுடன் , சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல் நிலையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினா் முன்னெடுத்த துரித நடவடிக்கையின் அடிப்படையில், இன்றைய தினம் திங்கட்கிழமை  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வீட்டில் திருடப்பட்ட நகைகளை மீட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினா், சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More