Home இலங்கை ஜனாதிபதிக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதிக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

by admin
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கை மே மாதம் 8ம் திகதிக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜனவரி 15 ஆம் திகதி தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர் , பல்கலைக்கழக மாணவர் ஆகியோர்  முன்னிலையாகியிருந்தனர்.
மேலும் சில சந்தேக நபர்களை வழக்கில் இணைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் மன்றில் தெரிவித்தனர். அதனை அடுத்து, வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு மன்று ஒத்திவைத்தது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More