Home இலங்கை மாற்றுத் திறனாளியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

மாற்றுத் திறனாளியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

by admin

விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீடொன்று கட்டி , கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கு ஜே/ 370 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் ஐந்து பேர் அடங்கிய குடும்பம் ஒன்றின் குடும்ப தலைவர் விபத்து ஒன்றில் சிக்கி மாற்றுதிறனாளி ஆனார்.
அக்குடும்பத்தினருக்கு கனடாவில் வசிக்கும் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஆகியவற்றின் நிதி பங்களிப்பில் , நான்காவது சிங்க ரெஜிமென்ற் படைப்பிரிவின் ஆளணி மற்றும் கட்டுமான உதவியுடன் வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த வீட்டினை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு , நான்காவது சிங்க ரெஜிமென்ட் லெப்டினன்ட் கேணல் தவுலுகல தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சொர்ண போதொட்ட கலந்து கொண்டு வீட்டினை பயனாளியிடம் கையளித்தார்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More