Home இலங்கை நெடுந்தீவில் நால்வரின் சடலங்கள் மீட்பு

நெடுந்தீவில் நால்வரின் சடலங்கள் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று  காவல்துறையினா் தெரிவித்தனர்.

மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று  காவல்துறையினா்  கூறினர்.

விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று காவல்துறையினா் கூறினர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை காவல்நிலையத்திலிருந்து மேலதிக காவல்துறையினா் நெடுத்தீவுக்குச் சென்றுள்ளனர்.–

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More