Home இலங்கை வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறை திறப்பு

வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறை திறப்பு

by admin

யாழ்.வரணி மத்திய கல்லூரியின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை பாவனைக்காகத் திறந்து  வைக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி, வரணி ஒன்றியத்தின் 5 மில்லியன் ரூபா நிதியுதவியில் இராணுவத்தின் பங்களிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நிலையில்    இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,
யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட, மாகாண சிரேஸ்ட கல்விச் செயலாளர் நளாயினி இன்பராஜ், மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், தென்மராட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அபிராமி இராஜதுரை,வரணி ஒன்றிய தலைவர் தம்பு செல்வகுமார் ஆகியோர் விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More