Home இலங்கை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை-9 மீனவர்கள் கைது.

மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை-9 மீனவர்கள் கைது.

by admin
மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் துணையுடன் கடற்பரப்பில் கள ஆய்வில் ஈடுபட்ட வேளையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட  9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (13) அதிகாலை மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில்  இடம்பெற்றுள்ளது.
 
இச்சம்பவத்தின் போது மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் மன்னார் உப்புக்குளம் , பள்ளிமுனை யைச் சேர்ந்த தலா மூன்று மீனவர்கள் கொண்ட  மூன்று படகுகளில் 9  மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை மடி யை பயன்படுத்தி கடலட்டை பிடிக்கும்  நடவடிக்கையில்  ஈடுபட்ட போது  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கைது செய்யப்பட்ட  மீனவர்கள் சட்ட நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட கடற்தொழில் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More