Home இந்தியா   ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை

  ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை

by admin

 

அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் தொடர்ந்த வழக்கில் நடிகையும் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினருமான  ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ஜெயப்பிரதா நடத்திய திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. பணத்தை அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தவில்லை என வழக்கு  தொடரப்படடிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது

ஆந்திராவை சேர்ந்த நடிகை ஜெயப்பிரதா இந்திய திரை உலகின் முன்னணி நடிகை. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பின்னர் இந்தி திரை உலகிலும் விளங்கினாா.  1994-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றா்ா.   ஜெயப்பிரதா  2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில். உ.பி. ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு  நாடாளுமன்ற  உறுப்பினரானார். 2009 லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு வென்றிருந்தாா்.

2 தியேட்டர்களை நடத்தி வந்த  நடிகை ஜெயப்பிரதா. இந்த தியேட்டர்களுக்கு சொத்துவரி செலுத்தவில்லை என்பதால் ஏற்கனவே தியேட்டர் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்ட நிகழ்வும் உண்டு. இதே பாணியில் தியேட்டர் ஊழிய்ர்களிடம் இஎஸ்ஐ செலுத்துவதற்கான பணத்தையும் ஜெயப்பிரதாவின் தியேட்டர் நிர்வாகம்  பிடித்தம் செய்திருக்கிறது  , ஆனால் முறையாக இப்பணத்தை அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை. இதனால் ஜெயப்பிரதா மீது அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் தற்போது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More