Home இலங்கை கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழி – இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழி – இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ - 1124 இலக்கமும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன

by admin

 

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியில் எட்டாவது நாளாக  ​நேற்று (14) அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி சன்னம் ஒன்றும்,   அவர்களுடைய   ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ – 1124 இலக்கமும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.  மேலும்    இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

நேற்றைய  8ம் நாள் அகழ்வாய்வுகள்   முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ. பிரணவன், சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல், சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன், றணித்தா ஞானராசா, கிராம சேவையாளர், தடயவியல்  காவல்துறையினா்  ,   காவல்துறை  விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன. குறித்த அகழ்வுபணியானது இன்று (15) தொடரும் என சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த  செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More