Home இலங்கை யாழில். அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த 10 நாட்கள் அவகாசம்

யாழில். அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த 10 நாட்கள் அவகாசம்

by admin
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, யாழ்குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கடற்தொழில்  அமைச்சர் தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி  காவல்துறை மா அதிபர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள்,  காவல்துறை  உயர் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்,

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More