Home இலங்கை யானை தாக்கியதில் பெண்    பலி 

யானை தாக்கியதில் பெண்    பலி 

by admin
 
யானை தாக்குதலுக்கு  உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின்  சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு வம்பியடி பகுதியில் கடந்த  செவ்வாய்க்கிழமை (03) இரவு காட்டு யானை   தாக்கியதில்   கல்முனையில் இருந்து நிந்தவூர் அல்லிமூலை  வழியாக இறக்காமம் பகுதிக்கு   மோட்டார் சைக்கிளில்   பயணம் செய்த  பெண்ணே உயிரிழந்திருந்தார்.
  உயிரிழந்தவர்   இறக்காமம் பகுதி  9 ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் விபானி  என்ற    3 பிள்ளைகளின் தாயார் என்பதுடன் அண்மையில் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு ஒன்றிற்கு செல்லவிருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு   மரணமடைந்த நிலையில்  எடுத்து செல்லப்பட்ட  பெண்ணின்   சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சம்மாந்துறை  நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரனின் கட்டளையின் பிரகாரம்  மேற்கொண்ட      மரண விசாரணையின் பின்னர்   உறவினர்களிடம்    கையளிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More