Home இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிாிழந்த பல்கலை மாணவர்களின் நினைவேந்தல்

காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிாிழந்த பல்கலை மாணவர்களின் நினைவேந்தல்

by admin
 காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலை மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலைகழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில், உயிரிழந்த மாணவர்களின் உருவ படத்திற்கு, பல்கலை மாணவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி , சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
 யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஐயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 20ஆம் திகதி இரவு, கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More