Home இலங்கை யாழில் 120 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது

யாழில் 120 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது

by admin

 

யாழ்ப்பாணம் பலாலி    காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் 120 லீற்றர் கசிப்புடனும், 800 லீற்றர் கோடாவுடனும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட  காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.   மயிலிட்டி வடக்கு பகுதியை சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.  இதன்போது கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.   விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More