Home இலங்கை வட்டக்கச்சியில் இளம் குடும்பஸ்தர்  அடித்து கொலை

வட்டக்கச்சியில் இளம் குடும்பஸ்தர்  அடித்து கொலை

by admin

 

வட்டக்கச்சியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர்  ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா். கிளிநொச்சி இராமநாதபுரம்   காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில்   நேற்று புதன்கிழமை (25) குறித்த சம்பவம்    இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யக்கட்டுள்ளாா் . வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த  குடும்பஸ்தருக்கு  வந்த  தொலைபேசி  அழைப்பினைத் தொடா்ந்து அவா்  கடையை விட்டு மோட்டார் சைக்கிளில்  சென்றுள்ளார்.

சற்று நேரத்தில் சத்தம் கேட்டுள்ள நிலையில்   கொலையினை மேற்கொண்ட இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடியுள்ளனர். இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என   காவல்துறையினரின் விசாரணையின் போது  சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்   சாரணைகளை ஆரம்பித்துள்ள இராமநாதபுரம்   காவல்துறையினா்   கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More