Home இலங்கை சான்றிதழ் வழங்கி வைப்பு

சான்றிதழ் வழங்கி வைப்பு

by admin

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளமோ கற்கைநெறி பூர்த்தி செய்து, ஆடை வடிவமைப்பில் தேசிய தொழிற்தகைமையை பெற்றுக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன் விழா மண்டபத்தில், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் த.சசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.   வடக்கு மாகாணத்தில் 302 பேருக்கு இதன்போது சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More