Home உலகம் காசாவில் போர் நிறுத்தம்  ஆரம்பம்

காசாவில் போர் நிறுத்தம்  ஆரம்பம்

by admin

 

காசாவில் இலங்கை   நேரப்படி இன்று காலை 10.30 மணியில் இருந்து நான்கு நாள் போர் நிறுத்தம்  ஆரம்பமாகியுள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு இஸ்ரேல் காசா மீது தாக்குதல்  மேற்கொள்ளாது என தொிவிக்கப்பட்டள்ளது

ஹமாஸ்  அமைப்பினா்  இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த   இஸ்ரேல் ,   காசா மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்கள்  46 நாட்களை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், பிணைக்கைதிகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இஸ்ரேல் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சுமத்தியதனால்
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. ஹமாஸ் அமைப்பினரும் பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாட்டை கட்டார்   செய்திருந்தது.

மேலும் விடுவிக்கப்படும் பிணைக்கைதிகளின் பட்டியல் இஸ்ரேலுக்கு  வழங்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  அதன்பின் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இன்று இரவு  பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனா்.

முதலில் பெண்கள் அவர்களின் குழந்தைகள் என்ற அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுதேவேளை பிணைக்கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல், தங்களது சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More